கல்வி உரிமை நாளைக் கொண்டாடுவோம்

// உண்மை நகல் //

ஜெ.ஜெயலலிதா
முதலமைச்சர் தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

தேதி. 09.11.2011

வாழ்த்துச் செய்தி

அன்புள்ள மாணவ மணிகளே / உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

இந்தியத் திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் “”"” தேசிய கல்வி நாள் “”"” என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள், “”"” கல்வி உரிமை நாளாக”" கொண்டாடப்படவுள்ளது.
இந்தியத் திருநாட்டின் வருங்காலத் துhண்களாகிய நீங்கள் உங்களின் கல்வியறிவை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியை விட மிக உயர்ந்த செல்வம் உலகில் வேறு ஏதுமில்லை, தமிழக அரசு, மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக சத்துணவு, சீருடை, பாடப்புத்தகம் ஆகியவற்றை வழங்குவதுடன் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்யவும் வழிவகை செய்துள்ளது. மேலும், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மிதி வண்டியையும் வழங்குகிறது. அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் எளிதாக பள்ளிக்கு செல்லும் வகையில், அவர்களது குடியிருப்புக்கு அருகில் பள்ளிகளை ஏற்படுத்துவதோடு, தேவையான ஆசிரியர் பணியிடங்களையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவியர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, இவ்வாண்டு முதல் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1500/-ம் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2000/-ம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினியையும் இவ்வரசு வழங்குகிறது.
மாணவ, மாணவியர் நலன் கருதி இவ்வரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி, தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இந்த “”"” கல்வி உரிமை நாளில்”" நான் வாழ்த்துகிறேன்.

ஜெ.ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.

இறந்த நாள்

 

இன்று எனது இறந்த நாள்

ஆம்.

45 அகவையில் இறந்து

46வது அகவையில் பிறந்தேன்.

ஒவ்வொரு கணமும்

இறந்த பின்னரே

அடுத்த கணம்

பிறக்கின்றது அல்லவா?

பெஸிமிஸ்ட் என்பவர்களே

நான் பெஸிமிஸ்ட் இல்லை

இந்த கணத்தில்

வாழ்கிறவன்

ஒவ்வொரு கணத்திலும்

புதுப்பித்துக் கொள்ளும்

நானா பெஸிமிஸ்ட்?

அடுத்த கணம்

இறப்பது திண்ணம்

என்றால் வருத்தம்

எதற்கு?

அதற்கடுத்த கணத்தில்

பிறப்பதும் திண்ணமே

எனும் எண்ணமே

இறப்பை விரும்புகிறது.

என்னை வாழ்த்தாதீர்கள்.

வசையொழிய வாழ்பவனல்ல நான்

வசையே எனக்கு ஊக்கத்தை தருகிறது.

வசையே எனது இசை.

சாவே உனக்கொரு நாள்

சாவு வந்து சேராதோ என்றான் கண்ணதாசன்.

காலனே அருகில் வாடா

காலால் மிதிக்கிறேன் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி.

நெருநல் உளனைப் பற்றி எழுதினான் வள்ளுவன்.

இன்று இக்கணத்தில்

இக்கணத்தை முழுமையாக

அனுபவித்து வாழும்

என்னைப் பாட வந்தது இயற்கை.

ஒவ்வொரு கணமும்

மாறிக் கொண்டிருப்பதுதான் இயற்கை.

நீ பார்க்க வேண்டும் என்று நினைத்து

பின்னர் பார்ப்பதற்குள்

இலையின் நிறமே மாறி விடுகிறது.

அந்த மாற்றத்தை அறிந்து விட்டால்

ஒவ்வொரு கணமும்

நான் இறப்பதில் மகிழ்ச்சியே எனக்கு.

மணிமேகலையில் கணிதம் 4

சோதனையாக பல முறை முயற்சி செய்து வெளியிடுகின்றேன்.

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

சோதனைப் பதிவு

ஏனோ தெரியவில்லை. இப்போது எழுதும் பதிவுகள் பதிப்பிக்க முடியவில்லை

மணிமேகலை இயம்பும் கணிதம் 4

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் 4 (திருத்தப்பட்டது)

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

மூலப் பிரதியைச் சிதைக்காமல் வருமா மொழிபெயர்ப்பு?

பொதுவாக, படைப்பாளிகள் கடவுள்களைப் போலக் கருதப்படுவதும், மொழி பெயர்ப்பாளர்கள் வெறும் மொழிப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் படைப்பாக்க ஆற்றல் இல்லாதவர்களாகவும் மட்டுமே கருதப்படுவதும் இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மொழி பெயர்ப்பாளர்கள் செய்து வரும் பணி ஓர் அறிவியல் பணியா, அல்லது ஒரு கலையா என்பது குறித்த விவாதம் சர்வதேச அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது… இவற்றில் ஏதேனும் ஓர் அம்சத்தை மட்டுமே மொழி பெயர்ப்பாளரின் பணியாகக் கருதுகின்ற ஒரு தலைப்பட்சமான கண்ணோட்டம் வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் மட்டுமின்றி, சில மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியிலும் நிலவி வருவதை நாம் காண முடிகின்றது.

இந்த அளவிலாவது மொழி பெயர்ப்பு பணி ஒரு விவாதப் பொருளாக இருந்து வருகின்றதே என்று நாம் ஆறுதல் அடைய வேண்டிய நிலைமைதான் இன்றைய சர்வதேசச் சூழலில் உள்ளது. ஆனால் தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரையில் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் படைப்புகளுக்கு நிகராக மொழிபெயர்ப்புகளை நிறுத்தி விவாதிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சியடையவில்லை. அதே நேரத்தில் மொழி பெயர்ப்பு நூல்களுக்கான தேவையை – அவை இலக்கிய நூல்களாக இருந்தாலும் சரி, அரசியல் நூல்களாக இருந்தாலும் சரி, தமிழ் வாசகப் பரப்பு நாள்தோறும் உணர்ந்து வருகிறது என்பதையே தற்போது ஏராளமான மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவருவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

மொழிபெயர்ப்பு என்பது மூலப்பிரதியின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் சிதைக்காத்தாக, படைப்புலகம் கோருகின்ற ஆழமும் செறிவும் நிறைந்ததாக, நூற்பிரதியிடமிருந்து தொடர்பற்று விலகிச் செல்லாததாக, அம்மூலப் பிரதியிலுள்ள அனைத்து அன்னிய மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் இயன்றவரையில் முழுமையாக மொழிபெயர்ப்பிற்குள் கொண்டு வரக் கூடியதாக இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோயமுத்தூரில் வசிக்கும் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ‘புதிய புத்தகம் பேசுது’ என்கிற இதழுக்கு ஆகஸ்ட் 2011 மாதப் பிரதியில் பேட்டியில் கூறியுள்ளார்.

 நன்றி: புதிய புத்தகம் பேசுது- ஆகஸ்ட் 2011

மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், நிகழ்வுகள் குறித்த கருத்து பரிமாற்ற அரங்கு கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் 4

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் “சத்தம் அநித்தம்” என்றல்

பக்கம் “பண்ணப்படுதலால்” எனல் 29-070

பக்க தன்ம வசனம் ஆகும்

தூய காரியம் என்றால் குற்றமற்ற காரியானுமானம் என்று பொருள். சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமம் ஆவதை ஆராயுமிடத்து அது பக்க தன்ம வசனம் எனப்படும்.

‘ஒலி நிலையற்றது’ என்று கூறுதல் (மேற்கோள்) பக்கமாகும்.

எழுப்பப்படுவதால் (ஒலி நிலையற்றது) என்பது பக்க தன்ம வசனமாகும்.

இனி பக்கம் இருவகைப்படும்.

“யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது

அநித்தம் கடம் போல்” என்றல் சபக்கத்

தொடர்ச்சி “யாதொன்று அநித்தம் அல்லாதது

பண்ணப் படாதது ஆகாசம் போல்” எனல்

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க

சபக்கத் தொடர்ச்சி என்பது, எதெது செய்யப்படுவதோ அது நிலையற்றது குடம் போல் என்று சொல்வதாகும்.

‘எதெது நிலையானதோ அது செய்யப்படாததாகும், வானத்தைப் போல’ என்று சொல்வது விபக்கத் தொடர்ச்சி என்னும் மீட்சி மொழியாகும்.

‘எழுப்பப்படுவதால், ஒலி நிலையற்றது என்ற பக்க தன்ம வசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்பதையே பக்கப் பொருளாக நிறுத்திப் பிற பொருட்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சி என்றும், சாதிக்கப்பட்ட நிலையற்ற பொருள்களுக்கு மறுதலையாகிய நிலையான பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி ‘செய்யப்படாதன’ என்பதை மறுதலை ஏதுவாக்கி ஏற்ற எடுத்துக்காட்டோடு சாதிப்பதால் விபக்கத் தொடர்ச்சி என்றும் இவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க தன்ம வசனத்தின் மறுதலையாவதால் ‘மீட்சிமொழி’ என்றும் கூறினார். இவ்விபக்கத் தொடர்ச்சி வெதிரேக வசனம் எனப்படும்.

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது

“இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை” என்றல்

செவ்விய பக்கம் “தோன்றாமையில்” எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாத (உடன்பாட்டு நிகழ்ச்சி இல்லாத) அநன்னுவய அனுமானத்தால்,

பொருளை உணரும் திறமாவது ‘இவ்வெற்றிடத்தில் குடம் இல்லை’ என்பது.

இது நல்ல பக்க மொழியாகும்.

‘தோன்றாமையால்’ என்னும் ஏது பக்கதன்ம வசனமாகும்.

“இன்மையின் கண்டிலம் முயற்கோடு” என்றல்

அந் நெறிச் சபக்கம் “யாதொன்று உண்டு அது

தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்” எனல்

ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்.

‘யாதொன்று வெளிப்படையாக இல்லையோ அதனைக் காண முடியாது, முயற்கொம்பு போல’ என்பது அ நன்னுவயப் பிரமாண நெறியில் பெறப்படும் சபக்கத் தொடர்ச்சியாகும். ‘ஏது வெளிப்படையாய் உள்ளதோ அதைக் காண முடியும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்பது அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி ஆகும்.

இவ்வகை ஏது பொருள் சாதிப்பன

“என்னை காரியம் புகை சாதித்தது?” என்னின்

“புகை உள இடத்து நெருப்பு உண்டு” என்னும்

அன்னுவயத்தாலும் “நெருப்பு இலா இடத்துப்

புகை இல்லை” என்னும் வெதிரேகத்தாலும்

புகஈ நெருப்பைச் சாதித்தது

ஏது என்பது சாதனம்.

ஏதுக்கள் இவ்வகையால் பொருளைச் சாதிப்பன.

காரியமாகிய புகையே காரணாமிய நெருப்பைச் சாதித்தது.

அது எவ்வாறு என்றால்,

‘புகை தோன்றுமிடத்தில் நெருப்புள்ளதாம்’ என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியாலும்

நெருப்பில்லாத விடத்துப் புகை இல்லை என்ற வெதிரேகத்தாலும், (எதிர்மறை உடன் நிகழ்ச்சியாலும்)

புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம்.

சாதித்தது என்னின் 29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்

மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

இவ்வாறு ஏதுப் பொருளைச் சாதிக்கும் என்றால்

நெருப்பின் காரியமாகிய புகையில் உண்டான மேல் எழுந்து செல்லும் குணமும்,

வளைந்து படர்ந்த படலமும் ஆன இரண்டும்

காரணமாகிய நெருப்பிலிருந்து தோன்றி வரும் காரியமாதலால்

மேல் எழுந்து சென்று கறுத்திருப்பனவும்,

மாறுபட்டு படலமாய் படர்ந்திருப்பனவும் நெருப்பைச் சாதிக்க வேண்டுமே?

காரணத்தின் பண்பு காரியத்திற்கும் உண்டு என்பது அளவைவாதிகளின் கருத்து.

அவ்வாறாயின் புகையின் குணங்களான மேனோக்கிச் செல்லலும், படர்ந்திருத்தலும் உடைய

வேறு காரியங்களும் காரணமாகிய நெருப்பைச் சாதிக்க வேண்டுமே என்றார்.

இதனால் காரியம் காரணம் சாதித்ததில் பிழை என்பதைக் காட்டினார்.

அன்னுவயம் சாதிக்கின் “முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா”

நெருப்பும் புகையும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கும் உடன்பாட்டு உடன் நிகழ்ச்சிப் பொருளாகிய அந்நுவயத்தால்

பொருள் உண்மை சாதிக்கப்படும் என்றால் முன்பு ஒரு நாள் ஓரிடத்தே கழுதையையையும், கணிகையையும் ஒன்று சேர்ந்திருக்கக்

கண்டவன், பிற்காலத்தில் கழுதை இருப்பக் கண்டவிடத்து, கணிகையும் உடன் இருப்பதாகத் துணிய வேண்டுமே?

அது கூடாதாம்.

இதனால் அந்நுவய அனுமானம் பிழையுடையது என்பதைக் காட்டினார்.

“நெருப்பு

இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்” என்னின்

“நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்

நரி வாலும் இலையா காணப்பட்ட

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்

அரிதாம்” அதனால் அதுவும் ஆகாது

இனி நெருப்பில்லாத விடத்தில் புகை இல்லையாம் என மேற்கொள்ளும் சிறப்பமைந்த வெதிரேக (எதிர்மறை உடன்பாட்டு நிகழ்ச்சிப் பொருளால்) அனுமானத்தால் பொருள் உண்மை சாதிக்கப் படுமாயின் ஓரிடத்தே கழுதையின் பிடரியில் நாய்வால் இல்லாதிருப்பதோ நரிவாலும் இல்லையாக அவ்வாறு காணப்பட்ட பொருளின் வெதிரேக அறிவு கொண்டு பிறிதோரிடத்தில் நரிவால் இருக்கக் கண்டு நாய்வாலும் உண்டு என அனுமானித்தல் கூடாது. அதனால் அதுவும் பிழையானதாகும்.

மணிமேகலை இயம்பும் கணிதம் – 3

இப் பெற்றிய அளவைகள்

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்

மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்

அக்கபாதன் கணாதன் சைமினி

இவ்வாறு ஆறு சமயங்கள் உலகாயுதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் முதலியன. அவற்றின் ஆசிரியர்கள் முறையே (பிரகஸ்பதி), வியாழன், புத்தன் (சினேந்திரன்), கபிலன், அக்க பாதன் (அட்ச பாதன்), கணாதன், சைமினி ஆகியோர் ஆவார்.

 

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்

உவமானம் அருத்தாபத்தி அபாவம்

இவையே இப்போது இயன்று உள அளவைகள்

வியாழன் காட்சி அளவை ஒன்றை மட்டும் அளவையாக கொண்டார்.

புத்தன் காட்சி, கருத்தளவை ஆக இரண்டும்,

கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் கூட்டி மூன்றும்,

அக்கபாதன் உவமானம் சேர்த்து நான்கும்,

கணாதன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும்,

சைமினி காட்சி முதல் அபாவம் வரை ஆறும் அளவைகளாக கொண்டனர்.

அந்தந்த சமயத்தாரால் இப்பொழுது வழங்கப்பட்டு வரும் அளவைகள் இவையேயாகும்.

 

நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே

ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்

சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி

விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள் 29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என

காரண காரிய சாமானியக் கருத்து

ஓரின் பிழைக்கையும் உண்டு

மணிமேகலையே ! நுணுகிக் கேட்பாயாக. ஆதி புத்தன் உரைத்த அளவைகள் இரண்டே ஆகும். (குறிப்பு: இங்கு இளங்கோ அடிகள் கூறியதை மட்டும் முதலில் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாக எழுதும் பொழுது எனது கருத்துக்களை எடுத்து உரைக்கின்றேன். அதில் எவ்வாறு தற்போது கணிதத்தில் தர்க்கம் கருதப்படுகிறது என்று விளக்குகிறேன்.)

அவை குற்றமற்ற காட்சி அளவை, கருத்தளவை ஆகும்.

ஒரு பொருளைக் கண் முதலிய பொறிகளால் வண்ணம் ( நிறம்) முதலியவற்றைப் பற்றிக் காணுதல் மூலம் நேர்முகமாக அறிவதே காட்சியாகும். இவ்வாறு ஒரு பொருளின் பொருண்மையை மாத்திரம் கண்டு உணரும் அறிவை பிரத்தியக்கம் (காட்சி அளவை) என்று சொல்லி, பிறரால் உணரப்படும் அப்பொருளின் பெயர், சாதி, குணம், தொழில் முதலியவை அனுமானத்தும் (கருத்தளவை) அடங்கும் என ஆராய்ந்து தெளிந்து காட்சி அளவைகளுக்கு இலக்கணம் காணாது விட்டனர்.

இனி சுட்டு உணர்வோடு, ஒரு பொருளின் பெயர், சாதி, குணம், தொழிலில் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி ஆகும். சவிகற்ப காட்சிக்கு சுட்டு உணர்வு அடிப்படை: மனத்தின் அனுமான அனுமேயச் சிந்தனைகளால் சவிகற்பக் காட்சி அமைவதால் அது முற்றுப் பெற்ற அறிவாகும். சவிகற்பக் காட்சியைப் பயக்கும் கருத்தளவை மூன்று வகையாகும். அவை 1. காரணானுமானம் 2. காரியானுமானம் 3. சாமானியானுமானம். இம்மூன்று அளவைகளையும் பொதுவாக ஆராய்ந்தால் காரணானுமானமும், சாமானியானுமானமும் பிழையாயிருப்பதை உணரலாம்.

 

பிழையாதது

கனலில் புகைபோல் காரியக் கருத்தே

ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்

ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற

இவற்றில் காரியானுமானம் ஒன்றே புகை இருக்குமிடத்தில் தீ இருக்கும் என்ற உண்மையைப் போல் பிழையில்லாதது. ஏனைய சாமானியானுமானத்தில் சாதனமும் சாத்தியமும் காரணகாரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமையாததால் அதனாற் பெறும் உணர்வு ஐயத்திற்கு இடமாகும்.

விளக்கம்:

காட்டில் எழும் ஒலியால் (சாதனம்) காட்டில் யானை இருக்கும் உண்மையை (சாத்தியம்) அனுமானித்தாலும் சாதனமும் சாத்தியமும் ஒரே இடத்தில் சேர அமையாததால் காட்டில் இன்ன இடத்தில் யானை இருக்கிறது என வரைந்து காட்ட சாமானியானுமானத்தில் முடியாது. இது பிழையாகும்.

காரணானுமானத்தில் சாதனத்தின் காரணமாகச் சாத்தியம் ஒரு தலையாகத் துணியப்பட முடியாது. கருமுகில் (சாதனம்) கண்டவுடன் மழை (சாத்தியம்) பெய்யும் எனக் காரணானுமானத்தால் துணியப்பட்ட போதிலும், காரணமாகிய முகிலுக்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமான காற்று முதலிய உண்மையின் வெளிப்பட்ட காரணங்கள் சாத்திய மாகிய மழை வரவுக்குக் கட்டுபட்டதல்ல. ஆனால் காரியானுமானத்தில் கண் ஏதுவாகிய காரியத்தின் கண், காரணமாகிய பொருள் உண்மை நிலை பெறுவதால் இதில் பிழையேற்படுவதற்கு இடம் இல்லை. வெள்ளம் வருவதாகிய காரியத்தைக் கொண்டு அதற்குக் காரணமான மழை பெய்திருத்தலை நிச்சயிப்பதால் பிழை ஒன்றும் ஏற்படாது.

காட்சியும் கருத்தும் தவிர ஏனைய ஆகமம் முதலிய அளவைகள் எல்லாம் வழியளவைக்குரியவாகும் முறைமையால் கருத்தளவையில் அடங்கும்.

 

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்

நிகமனம் என்ன ஐந்து உள

கருத்தளவைக்கு ஐந்து உறுப்புகள் உண்டு. அவை: 1) மேற்கோள் (பக்கம்) 2) ஏது 3) எடுத்துக்காட்டு (திட்டாந்தம்) 4) உபநயம் 5. நிகமனம்.

 

அவற்றில்

பக்கம் “இம் மலை நெருப்புடைத்து” என்றல்

“புகையுடைத்து ஆதலால்” எனல் பொருந்து ஏது 29-060

“வகை அமை அடுக்களை போல்” திட்டாந்தம்

உபநயம் “மலையும் புகையுடைத்து” என்றல்

நிகமனம் “புகையுடைத்தே நெருப்புடைத்து” என்றல்

இவற்றுள், மேற்கோளாவது ‘இம்மலை நெருப்பு உடையது’ என்று மொழிதல்;

மேற்கோளைச் சாதிப்பதற்குப் பொருத்தமான ஏதுவாவது ‘புகை உடைமையால்’ என்று மொழிதல்.

எடுத்துக்காட்டாவது ‘ பலவகைப்பட்ட அடுக்களை போல்” என்று கூறுவது.

உபநயமாவது ‘இம்மலையும் புகையுடையதாம்’ என்பது;

நிகமனம் என்பது ‘எது எது புகையுடையதோ அது நெருப்புடையது’ என்று கூறுவதாகும்.

 

“நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்

பொருத்தம் இன்று புனல்போல்” என்றல்

மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்

வைதன்மிய திட்டாந்தம் ஆகும்

இதில், திட்டாந்தம் இரு வகைப்படும்; சாதன்மிய திட்டாந்தம், வைதன்மிய திட்டாந்தம் என்பனவாகும்.

யாகசாலை போல புகையுடைய மலை நெருப்புடையது என்று கூறுவது சாதன்மிய திட்டாந்தமாகும்.

இவ்வாறில்லாமல் யாதொன்று நெருப்பு இல்லாததோ அது புகையோடு பொருந்தாது, தண்ணீரைப் போல என்று உணர்ந்த மேற்கோளுக்கு மறுதலையாக எதிர்முறைமுகமாக வற்புறுத்துவது வைதன்மிய திட்டாந்தம் எனப்படும்.

சங்கப் பலகையில் இடம்

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களின் தொகுப்பு கிரி அவர்களின் இணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

திரு.ஜெய மோகன் அவர்களின் இணையத்தில் அறிவிப்பு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அனுபவங்கள் முதற் பகுதி

அனுபவங்கள் இரண்டாம் (இறுதிப்) பகுதி

விரிவான கட்டுரைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது.

Follow

Get every new post delivered to your Inbox.